Thursday, 2 October 2025

மகாத்மா


 பூவுலகத் தந்தை

 🙏🙏🙏


கள்ளமில்லை

கபடமில்லை

அதனால்

உள்ளம் மரிக்கவில்லை! 


உணவை விட்டு

உடையைச் சுருக்கி

நடையைப் பெருக்கி

படைமுகம் வென்றார்! 


உடல் துளை ரவைகள்

உள்ளத்தைத் 

தொட்டுத் தான்

வெட்கிச்சிவந்து

வெளிவரத் தயங்கின! 


வெள்ளாடை பெற்றது

உத்தமன் ரத்தம்-அது

மெய்யெழுதிய மை! 


உயிரைப் பரிசளித்து

ஒரு பூவின் சிரிப்பை

வெல்ல வந்த

பூவுலகில் தந்தை! 


காலம் கடந்தும்

மரணத்தை

வெல்லும்

வெள்ளந்திச்

சிரிப்'பூ'க்கள்! 

----------

ப. திருநாவுக்கரசு

2 comments:

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...