பட படப்பு, எரிச்சல், சிடு சிடு, காரணமில்லா ஆத்திரம், கடு கடுப்பு, கர்வமும் அலட்சியமும், புகைச்சல்...இல்லாத ஒரு தியானம் காலையில் பத்து நிமிடம் போதும்.
பக்தியைவிட பண்பை வளர்க்கும். பகுத்தறிவாளனும் பக்தனும் பேதமில்லாமல் அமரும் இடம் அது.
தியானம் மன ஒருமைப்பாடு. அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல் கறை போக்கும் சலவைக்கட்டி.
துருப்பிடிக்காத அன்பாயுதம்!
அருள்நிறைந்த உள்ளத்தின்அழகுதரும் ஔடதம்!
பழகுவோம்.
என் பூனக்குத் தெரிந்திருக்கிறது அது!
*****
ப.திருநாவுக்கரசு

மனமே எதற்கும் தீர்வும் முரணுமாக. பூனைக்கு மட்டும் அன்று விலங்குகள் யாவும் இதுபோன்று மெளனித்திருப்பது. இதுபோல சின்னதாய்த் தொடருங்கள் ஐயா.
ReplyDeleteநன்றிங்க பேராசிரியர். செய்கிறேன்.
Deleteஆகா...தவக்களை!!!
ReplyDelete